வெள்ளி, 26 அக்டோபர், 2012

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்

காலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்று சொல்வார்கள். கால தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.

அதே கால சூழலில் நற்காவியங்களும் வளரலாம், கருஞ்சுவடுகளும் எழலாம். நம்மை வந்தடைவது எதுவானாலும் அதனையே தாங்கிடும் வல்லமை தந்திட இறைவன் தான் அருள வேண்டும்.

சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் பருவங்களை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள்.  
அவையன

பருவங்கள் (பெண்கள்)
வயது எல்லை
பருவங்கள் (ஆண்கள்)
வயது எல்லை
பேதை
ஐந்து முதல் எட்டு வரை
பாலன்
ஒன்று முதல் ஏழு வரை
பெதும்பை
ஒன்பது முதல் பத்து வரை
மீளி
எட்டு முதல் பத்து வரை
மங்கை
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மறவோன்
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மடந்தை
பதினைந்து முதல் பதினெட்டு வரை
திறவோன்
பதினைந்து மட்டும்
அரிவை
பத்தொன்பது முதல் இருபத்தி நான்கு வரை
விடலை
பதினாறு மட்டும்
தெரிவை
இருபத்தைந்து முதல் இருபத்தொன்பது வரை
காளை
பதினேழு முதல் முப்பது வரை
பேரிளம்
முப்பது முதல் முப்பத்தி ஆறு வரை
முதுமகன்
முப்பதிற்கு மேல்

பருவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து வலைப்பூக்களைப் பார்ப்போமே!


என் மனம் தான் எனக்கு கோயில். அங்கு உணர்வுகள் தான் எனக்கு கடவுள். என் பெயர் தான் எனக்கு மதம். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. 

பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும் என்று தன்னைப் பற்றி அறிமுகப் படலம் தந்திருக்கும் இலங்கை எழுத்தாளார் ம. தி. சுதா அவர்களின் மதியோடை என்னும் வலைப்பூவினில் கவிதைளும், 
கதைகளும் நிரம்பி வழிகின்றன.

வெளியாகியுள்ள பதிவுகளில் நான் ரசித்ததை பகிர்கின்றேன்.

இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிக்கையில் விட்ட குறையும், தொட்ட குறையும் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதையானது கதை நாயகர் தானே நமக்கு கதையைச் சொல்லிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படிப்பதற்கு ஏற்ற சுவையினையும் கொண்டிருக்கின்றது.

அறிவூட்டும் கவிதைகள் என்ற தலைப்பிலே நாயகரின் காதல் வரிகளை நாமும் சுவைக்கலாம்.

பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய் - உணர்ச்சி ததும்பிடும் உன்னதமான கட்டுரை. 


இலங்கையைத் தாயகமாய்க் கொண்டு மலேசியாவிலிருந்து நம்மோடு இதந்தரு தென்றல் வடிவிலே உரையாடும் சகோதரம் ரூபன் அவர்களின் வலைப்பூவிற்குள் தற்போது நுழைந்திருக்கின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து 
                            என்ற அப்பத்வாசுகி வீட்டுக்காரரின் வரிப்பொருளை நமக்கு சொல்லாமல்  ிப்பு மட்டும் என்னோடு இருக்கின்ற என்ற சொல்லியிருக்கின்றார்கள். கல்வி ஒன்றே அழியாச் செல்வம், எழுதப்படும் எழுத்துக்கள் என்றும் தரமானவையாக இருந்திட நம் சிந்தையில் தெளிவிருந்தால் போதும் என்று நண்பருக்கு நாம் இங்கே ஒரு உதவிக்குறிப்புரையினை அளித்து விட்டு மேலே செல்வோமே.

நவயுகக் காதலுக்கு சரியான சாட்டையடியாய் முகவரி அறிந்து காதல் செய் என்ற தலைப்பிலான கவிதை விளங்குகின்றது. மேலும் கூடுதல் சுவையாக இந்த பதிவைத்தான் சகோதரம் ரஞ்சனி நாராயணன் அவர்களும் தன் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மேற்கோளிட்டிருக்கின்றார்கள்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் வளரும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற வரிகளை நினைவு கூற வைத்து விட்டீர்களே. 

எப்போது விடியும் எம் வாழ்வு தலைப்பிலமைந்த கவிதை நெஞ்சில் துயரலைகளை மெல்லிய கீற்று கொண்டு வருடிவிட்டுச் செல்கின்றது. இந்த நிலையும் மாறிவிடும்” என்ற எண்ணம் ஒன்றே நம்முடைய தற்போதைய சமாதானப் பொருள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நல்ல சுயசார்புச் சிந்தனை எழுத்தாளர். மென்மேலும் வளர்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எனக்குப் பிடித்த சில வலையகங்களில் தனிப்பட்ட பதிவினை குறித்துச் சொல்லிடாமல் அந்த வலையகத்தினையே மொத்தமாய் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

அவையன: 
அடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்ல பெற்றோராகவும், வழிநடத்திச் செல்லக் கூடிய ஆசானாகவும் விளங்கிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்திடும் வலைப்பூ.

 நாம் அங்கே இணைந்து நம் கருத்துகளை மற்ற பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் சேவை செய்யலாம்.


******************************************************

என் மதிப்பிற்குரிய அற்புதமான நபர். வலைத்தளம் சார்பான எனது இடக்கை, வலக்கை, வழுக்கை எல்லாம் இவரையே சாரும். என் வலைப்பூவில் ஏற்படும் அவ்வப்போதான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் வல்லவரின் வலைப்பூ. 

நண்பர் அப்துல் பாஷித் அவர்களின் வலைப்பூவானது கணினி உலகில் ஒரு அமுத சுரபி என்றால் வியப்பில்லை.

 ********************************************
 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வரலாறினை K.Kamaraj – by Kamaraj’s family – விருதுநகர் என்ற வலைப்பூவானது தாங்கி நிற்கின்றது.

 தமிழக ஆட்சியிலே காமராசரின் ஆட்சிக் காலத்தில் விளந்திருகும் நன்மைகள் குறித்து தனியே நான் சொல்லுவதை விட சான்றோர்கள் உரைத்தால் பொருளின் சுவை கூடும் அல்லவா. எளிமையாய் வாழ்ந்த தியாகச் செம்மல் குறித்த வலைப்பூவினை இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்வெனக்கு. 

***************************************
 எழுத்தாளர்களின் பெட்டகமாய் விளங்கும் இவ்வலையிலே நாம், கவிதை, கட்டுரை, கதை, புத்தக விமர்சனம் என பல்நோக்குச் சுவைகளை இனிமையுடன் சுவைத்திட முடியும். 

வாசகர் மறுவினைப் பகுதியில் நம்முடைய எண்ணச் சிதறகளையும் அள்ளித் தெளித்திட இடமளித்திருக்கின்றார்கள்.

 *******************************
எழுத்தறிவித்தவன் இறைவனே. அந்த இறைவனின் மகிமையைச் சொல்லிடும் அற்புதமான தளம் ஆன்மீகக் கடல். ஆன்மீகம் சம்பந்தமான பல கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார்கள். படித்துப் பயனடைவீர்களாக.

 *******************************
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று அண்ணல் மொழிந்திருக்கின்றார்கள். அந்தக் கிராமங்களின் அடிப்படை ஆதாரம் விவசாயம் தான்.

அந்த விவசாயம் செழித்தால் தான் நாமும் முன்னேற முடியும். ஆனால் விவசாயின் வாழ்க்கை நிலை ஒரு போதும் மேல் நோக்கிய பயணத்தை தொடங்குவதே இல்லை. விவசாயம் குறித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கும் இத்தளத்தினை கண்டு நாமும் பயன்பெறுவோமாக. 

*******************

நகைச்சுவை என்ற உணர்வு மனிதனுக்கு இல்லையெனில் என்றோ மக்கிப் போயிருப்பான். அத்தகைய நகைச்சுவை உணர்வானது பார்த்தல், கேட்டல், படித்தல் ஆகிய வழிகளில் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய நகைச்சுவை உணர்வினை நமக்கு அள்ளித்தரும் வலைப்பூவாக எங்கள் ப்ளாக் அமைந்திருக்கின்றது.


***************
கதைகள், அனுபவங்கள், சினிமா, விமர்சனம், இசைஞானி குறித்த கருத்துகள் என பல சுளைகளோடு இப்பலா வேரில் பழுத்து நிற்கின்றது. நாம் புசித்திட வேண்டியது தான் பாக்கி.! சுளை பிரித்து புசித்திட கிளம்புவோமாக.

 ***********
இணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.

அவரது இவ்வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடுவதில் மகிழ்வெனக்கு.

**********
கார்த்திக் அவர்கின் தகவல் குறிப்புகள் வலைப்பூவினிலே நாட்டு வைத்தியம், அழகு, அமுத மொழி, சமையல் குறிப்பு என பல குறிப்புகள் விரவி கிடக்கின்றன. 

அனைத்தும் நம் பார்வைக்காக தொகுத்தளித்திருக்கின்றார்கள். கண்டு நாமும் பயன்பெறுவோமே!


*******
புதுக்கவிதை படைத்திட்டேன் என்று புலவர் பலர் இன்று உரைநடையை ஒடித்து மடக்கி கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் புதுக்கவிதைக்குரிய இலக்கிய நயம் நோக்கியும், இதமான வரிகளில் இடித்துரைத்தல் செய்து நல்வழிப்படுத்திடலும் ஒரு கலை தான்.

 அதன் வழியிலே கவிதை வாசலின் ஆசிரியர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் வலைப்பூவானது முழுமையுமே கவிதை மலர்களால் நம்மை அகமகிழ வரவேற்கின்றது.

வாசலில் நுழைந்து நாமும் தேன் பருகி திளைத்தின்பம் கொள்வோமே!


*****
தமிழ் பதிவர் உலகிலே தன்னிகரற்ற இடம் பிடித்த வலையாசிரியர். இவரது பின்னூட்டங்களை நான் பல இடங்களில் கண்டு ரசித்ததுண்டு

அத்தனை வலைப்பூக்களிலும் இருக்கும் கருத்துகளை ரசித்து சுவைபட இரத்தினச் சுருக்க பின்னூட்டம் இடுகின்றார்கள் என்றால் சாதனை மகத்தானது தானே!

 அவருடைய வலைப்பூவிலே நமக்கு சிந்தனைத் துளிகளை பல்வித ஊட்டிகளின் மூலமாக ஊட்டுகின்றார்கள். ISO பதிவானது நம்மை நாமே 
சீர்படுத்திக் கொள்ள உதவிடும் படைப்பு என்பேன். 

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சினை

நம் தாய் தந்தையாராகிய இருவரின் மகிழ்ச்சியின் விளைவால் உதித்த மூன்றாவது உயிர்ப்பொருளாகிய நம் உடல் இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் ஆகியனவற்றின் கூட்டுச் செயல்பாட்டினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

 இதனில் ஒன்று தடுமாறினாலும் மனிதனின் இயக்கத்திலும் தடுமாற்றம் தொணிக்கும் என்பதால் தான் நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்வதனையும், அறநெறி முறைகளையும் வகுத்தளித்திருக்கின்றார்கள். 

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம் – உடலில் பஞ்சபேதம் தலைப்பினில் நான்காவது பாடலாய்க் குறிப்பிட்டிருக்கும் வரிகளை நாம் இங்கே காண்போம்.



இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழ் ஆம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே.
 

    (ப. இ.) இவ்வுடம்பு பாழாகிய மாயையின் காரியமாக வருவது. பாழ் - அருவம். காரணமாயை - அருவம். காரியமாயை - உருவம். உபாதி - காரியம். இவ்வுடம்பு எழுவகைப் பொருள்களால் யாக்கப்பட்டது.

அவை முறையே சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மச்சை - மூளை, சுக்கிலம் - வெண்ணீர். 

இத்தகைய ஏழு பொருள்களின் கலப்பு உடம்பு என்னும் உண்மை அறிய வந்தால் இவ்வுடம்பை ஒரு பொருளென்று யாரும் மதித்துக்கூறி மகிழமாட்டார். 

இத் திருப்பாட்டின்கண் தோல் ஒரு தனிப்பொருள்போல் கூறப்பட்டுள்ளது. வழும்பும் மச்சையும் ஒன்றாகக் குறிக்கப்பட்டுள்ளன.

     (அ. சி.) இரதம் - அன்ன ரசம். அத்தி - எலும்பு. வழும்பு - நிணம். மச்சை - எலும்புக்குள்ளிருக்கும் பொருள். உபாதி - காரியம்.


நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.


திருமூலரின் கருத்தினை நாமும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொண்டு இன்றைய தினமும் சில வலைப்பூக்களில் தேனுறிஞ்சிடப் பயணிப்போம்.


 “ஒரு கட்டத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருத்தி அம்பு இருந்தும் எய்யலாம் இல்லாவிட்டாலும் எய்யலாம் என்று நகைச்சுவை உணர்வோடு தன்னுடைய வலைப்பூவில் வசந்தத்தை அள்ளித் தெளிக்கின்றார்கள்.

 அத்தோடு விடாமல் நான் இன்னும் “L"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன். என்று நம்மை பார்த்துப் போகவும் சொல்கின்றார்கள்.

 பயங்கரமான குறும்பு போலிருக்கு. வாருங்கள் அகம் நோக்கி தெளியலாம்.

பறக்கவே என்னை அழைக்கிறாய்!  பதிவதனில் ஐந்தறிவு ஜீவராசிகளில் ஒன்றான பறவையினத்தின் மீது காதல் கொண்டு கட்டுரை வடித்திருக்கின்றார்கள். அற்புதமான நடையொடு பகிர்ந்த பதிவதனை நாமும் பார்ப்போமே!


அடுத்து ஒரு முக்கியமான பொருளை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன். இதனைப் பகிர வலையாசிரியர் அவர்களிடம் முன் அனுமதியும் வாங்கிவிட்டேன். 


கருப்பொருள் என்னவெனில் முகமற்றவளின் முகமன் என்ற கவிதையில் நேரடி பொருளெடுக்கும் வாய்ப்பினை வழங்காது சிந்தித்து பொருள் கொள்ளும் வாய்ப்பினை நமக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

 ஆனால் கவிதைக்கான மறுமொழியில் “பெயரில்லா” என்ற முகவரியோடு கருத்துரை வழங்கியிருக்கும் நண்பரின் பார்வையினை நாமும் ஒருக்கணம் சிந்தித்து அதன் பின்பு நாம் எங்கே வேண்டுமானலும் மறுமொழிகள் இடுவது பதிவரை மென்மேலும் உயர்த்த நம்மாலான ஒரு உதவி.

 இங்கு வலைப்பதிவரின் மனோதைரியத்தினையும், “பெயரில்லா” பதிவரின் கருத்துரைகளையும் பார்த்து நாமும் நம் கருத்தினை பதித்திட வேண்டிக் கொள்கின்றேன்.

நகைச்சுவை உணர்வு ததும்பிட குழப்பம் என்ற சிறுகதையினை அருமையான முறையிலே படைத்திருக்கின்றார்கள்.  அதனையும் வாசிப்போமே!




மேலே பார்த்த வலைப்பூவின் நாயகியே  “எங்கே எனது கவிதை” என்ற இந்த வலைப்பூவிற்கு பண்ணயக்காரார்.  குறுங்கவிதைகளால் நம் மனதை கொள்ளை அடிக்கின்றார்கள். 


அவற்றிலே நான் படித்த்தில் சிலவற்றை பகிர்கின்றேன்.
சொர்க்கம்

கனவுகளுடன்

ஏன்?

பூகோள ரீதியிலே கொஞ்ச தூரத்து உறவு நம்ம பங்காளி வசந்தகுமார் அவர்கள் உறவுக்காரன் நான் தான் என்று ஓடோடி வருகின்றார்கள்.

அவர்களை நோக்கி நாம் ஓடிச் சென்று அவர்களின் மலர்களில் நாம் தேன் பருகிடுவோம். சில பதிவுகளின் தங்களின் பார்வைக்காக..

பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு!

இயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா? ஆச்சரியம்தான்!


பால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2


வாழ்க்கை எல்லாம் போராட்டமா???
 



 கனவு மெய்ப்பட வேண்டும் என்ற முண்டாசுக் கவியின் வரிகளை தன் வலைப்பூவிலே வைத்து நம்மை அகமகிழ்வோடு வரவேற்கின்றார் வலைப்பூவின் ஆசிரியர் ந.துரை அவர்கள்.

 உள்ளே பிரவேசித்த மாத்திரத்திலே நனையுதே மாராப்பு என்ற தலைப்பிலே க(வி)தை நமக்கு அளித்திருக்கின்றார்கள்.

தாயன்பின் மகத்துவம் சொல்லிடும் தரமிக்க படைப்பினை படித்து முடிக்கும் தருவாயில் துரோணாச்சாரியாரின் குருதட்சணையினை நினைவு படுத்தி அந்தக் கட்டைவிரல் என்னும் தலைப்பிலே ஓர் கவிதையினை நமக்கு தந்திருக்கின்றார்கள். ஆச்சர்யப்பட வேண்டிய பதிவது.

 கூடவே மண்வாசத்தின் சுவைதனையும் உணர்வோம்.
__//''\\____//''\\____//''\\____//''\\____//''\\__
  
அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின்
 

                                        என்ற வள்ளுவனின் வாக்கினை தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் எனது கவிதைகள் வலைப்பூவின் ஆசிரியர் உமா அவர்கள் இலக்கண இலக்கியத்தில் கரை தேர்ந்தவர் என்பதனைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்.

 பாக்களை வரிசைப்படுத்தில் அதற்கு ஏற்ற கவிதைகள் வடித்து நமக்கும் மரபுப் பாவின் ஆசையினை விதைத்திடுகின்றார்கள். அவற்றில் சில கவிதைகள்


காணும்' பொங்கல்


நன்றாகச் செய்க நயந்து.


கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]


சந்தேகிக்{கு} உண்டோ சுகம்



தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தலைப்பினை வைத்திருந்தாலும் உள்ளே சமாச்சாரங்கள் அதிகமாய் தந்திருக்கின்றார்கள்.

அரசியல், அனுபவம், இலக்கியம், சிறுகதை, விளையாட்டு, புத்தக விமர்சனம், வரலாறு என பற்பல வகைப் பதிவுகள் நிரம்பியிருக்கும் இத்தளத்தினில் நான் கண்ட சில பதிவுகளை இங்கே தருகின்றேன்.


தவறான திசையில் ஓடும் உலகம்


செல்வம் தேடும் வழி மனித மேம்பாட்டு ஆலோசகர் கீதா பிரேம்குமார் அவர்களின்  தொழில் முனைவோர் கையேடு. 


பிரத்யோகமாய் பெண்களின் பொருளாதாரச் சூழலை உயர்த்திட என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.


ஆழி பெரிது – பூமி தியானம் சிந்தனைத் துளிகளை தொடர் வரிசையில் பரவியிருக்கின்றார்கள்.

 கரட்டடிப்பாளையத்து கவிஞனின் நிசப்தத்திற்குள் நாம் நுழைந்திடுகையில் நம்மை கவிதைகளும் மின்னல் கதைகளும் முகமன் கூறி வரவேற்கின்றன.

அவரது கவிதைத் தொகுப்பான கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைத் தொகுப்பினை நமக்கு மின்னூலாக தரவிறக்கம் செய்யத் தருவதோடு கவிஞர் ந.பெரியசாமி அவர்களின் விமர்சனத்தை  கூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள் என்ற தலைப்பிலே நமக்களித்திருக்கின்றார்கள்.

மரங்கொத்திக்கும் புழுவுக்குமான போராட்டம் என்ற தலைப்பினிலே கவிதையைப் புரிதல் என்ற வகையிலே  “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” என்னும் தொகுப்பில் உயிர்ப்பிரதி கவிதையினை நன்கு அலசியிருக்கின்றார்கள்.


 என் பெயர் கான். ஆனால் நான் தீவிரவாதியல்ல என்ற தலைப்பிலே மின்னல் கதையொன்றை படைத்திருக்கின்றார்கள். அருமையான தொகுப்பு கொண்ட தளம்.



சீனு அவர்களின் திடங்கொண்டு போராடு வலைப்பூவில் பிரபல மறுமொழியாளர்களின் வருகை அதிகமாகவே இருப்பதைக் கண்டு வலைப்பூவின் மகத்துவத்தை பார்த்தே உணர்ந்து கொண்டேன்.

பயணக்கட்டுரையாக நாடோடி எக்ஸ்பிரஸ் – ராமேஸ்வரம் தனுஷ்கோடி என்ற தலைப்பினில் தந்திருக்கும் பதிவினில் ராமேஸ்வரத்தினை புகழினையும், அவரது அனுபவத்தினையும் நமக்கு வழங்குகின்றார்கள்.


 
நைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே பதிவதனில் இரவில் 

அலுவலத்தில் பணிபுரிவோர் நிலையினை எடுத்துரைக்கின்றார்கள். 

அப்படியே ஒரு சிறுகதையினையும் நாம் பார்த்திடுவோமே!
துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் - தொடர்

 
People’s Action for Development (PAD) நிறுவனப் பணியாளர்களின் வலைப்பூ இது. மன்னார் வளைகுடாப் பகுதி என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரையோரப் பகுதியினைக் குறிப்பிடுவதாகும்.

 இந்த பூவினில் கடலின் வளமும் கடலோர மக்களின் வாழ்க்கை முறையினையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றார்கள்.

செடிக்காக... பொழிந்த மழைத்துளிகள்... கட்டுரையைப் படித்த மாத்திரத்திலே கண்களின் நீர்த்துளி அரும்பியதை என்னால் இன்று வரை மறக்க இயலவில்லை. 

கடவுள் துன்பங்களை நமக்கு மட்டும் கொடுத்து இவ்வுலகில் பயணிக்க அனுப்பிட வில்லை.
மாரிச்செல்வம் போன்ற மகத்தான இளம்பிஞ்சுகளின் வாழ்விலும் துன்பத்தினை மனம் போல் அள்ளி வழங்கியிருக்கின்றான் என்று நான் மறுமுறை சொல்லிக் கொள்ள ஏதுவாக மாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை இக்கட்டுரை அமைந்திருந்தது.


 வலைப்பூவானது தகவல்கள் என்ற தலைப்பினிலே மேலும் பல செய்திகளை நமக்குத் தருகின்றது.



பழமையை விட்டுக் கொடுக்காமல் புதுமையை வரவேற்கும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்களின் கடல் நுரைகளும் என் கவிதையும் வலைப்பூவானது “ உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது; நேர்மையுடன்” என்று ஓசோவின் பொன்மொழிகளைக் கொண்டு வரவேற்கின்றது.

புதிதாக புரிவதற்கு ஒன்றுமில்லை பதிவதனில் இன்றைய எதார்த்த நிலையினை விளக்கியிருக்கின்றார்கள். அப்படியே சிந்தனையை மேலும் சிதறவிடாமல் அலைகரை தலைப்பிலே வடித்த பாவில் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்னாலே!

விறால் மீன் பற்றிய தகவலைத் தந்து அசைவ ப்ரியர்களின் அன்பினைப் பெற்று விட்டார்கள்.


 வலைப்பூ முழுமையும் இந்திய தேசியத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமான பதிவுகள் பரவிக் கிடக்கின்றன. நல்ல விசயங்கள் அனைத்தும் ஒரு சேர கிடைக்கப்பெற்ற மகிழ்வில் சில பதிவுகளின் இணைப்பினைத் தருகின்றேன்.

புவிவெப்பமயமாதல் ஓர் அமானுஷ்யம்!


முன்னோர்கள் விட்டுச்சென்ற டாட்டூஸ்!


தாண்டியா வளர்க்கும் கலாசாரம்


போர்க்களத்தில் பிறந்த வில்லுப்பாட்டு!


 எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும் என்று வலை வாசலில் அழகு சிட்டொன்றை சிரிக்கச் சொல்லி நம்மை வரவேற்கின்றார் எழுத்தாளர் சுரேஷ்பாபு அவர்கள்.

உள்ளே பல்சுவைக் கருத்துகளும் பலவாறு நம்மை படிக்கச் சொல்லி தூண்டுகின்றன. அதனில் சில.
 

விவசாயம் பார்க்கும் ஐ.பி.எல் வீரர்! அதிர்ச்சி தகவல்!  என்று தற்போதைய சமூக அவலங்களைச் சுட்டிகாட்டி கம்ரானைக் கொண்டு நம்மை பெருமைபட வைக்கின்றார்கள். 

அதன் பின்பு கதைகள் பகுதியொன்று இருக்கின்றதே என்று அங்கே நோக்கினால் பயம் என்னை தொற்றிக் கொள்ளுமோ என்று கூட பயம்.
 

நீங்களே பாருங்களேன். பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 10
 

இதற்கு வழி பகவானை பிராத்திப்பதே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அற்புதமாய் வித்தியாச விநாயகர்கள்!  நமக்கு அருள்பாலிக்கின்றார்கள்.

சிலருக்கு வாழ்க்கை இன்பமயமாய் இருக்கின்றது. பலரது போரட்டகளமாக 
இருக்கின்றது. அந்த பலரில் நானும் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழர் வழிப்போக்கன் அவர்களின் வலைப்பூவானது சமூகத்தில் நிலவும் வலிகளையும், வரலாற்றுத் தகவல்களையும் கொண்டதாக அடங்கியிருக்கின்றது.

அவற்றில் சில

செத்துப்போவதற்கு 1008 காரணங்களில் இதுவும் ஒன்று........


தாகத்தில் தவித்த தொண்டருக்கு முலைப்பால் கொடுத்த சாதனைப்பெண்...!!


இன்னுமொரு ஆண்ட பரம்பரை.....??????



 செந்தமிழ் சொற்களின் களஞ்சியம் அகரமுதலி. தமிழர் பாடல்களும், சங்க இலக்கண, இலக்கிய நூல்களும், தமிழர் கணித முறைகளும், தமிழ் அகராதியும் ஒருங்கே அமையப் பெற்ற இந்த வலைத்தளம் எதிர்கால சந்ததியினருக்கும், தமிழார்வலர்களுக்கும் ஓர் அரிய பரிசுப் பொருள்.

தமிழர் அளவை முறைகள்


தமிழ் எழுத்துக்கள்


அகர வரிசையில் சொற்களுக்கான பொருள்

 

நல்லதே நினைப்பின் நல்லதே நடந்திடும் என்ற பொன்மொழியோடு நன்றிதனைக் கூறிக் கொண்டு அடுத்தொரு பதிவொடு வருகின்றேன்.
 

நன்றி

வியாழன், 25 அக்டோபர், 2012

வலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக்தி


தூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் சஹஸ்ராரம்.

மனதை ஒரு முகப் படுத்தி ஒவ்வொரு ஆத்ம பீடத்திலும் கரையேறி ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை நிலையான சஹஸ்ராரத்தினை அடைவது இறைவனின் பாதகமலங்களில் சரணடைவதாக கொள்ளப்படுவதாக சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நமக்கு தெரிவிக்கின்றார்கள்.

அந்த ஏழு சக்தி மையங்களைக் குறித்தும் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி வலைத்தளத்தில் ஒவ்வொரு நிலைக்கும் தெளிவான விளக்கங்கள் கொடுத்து நமக்கு அளித்திருக்கின்றார்கள்.

ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள் (மூலாதாரம்)

ஸ்வாதிஷ்டானம் இரண்டாவது ஆதாரம் (சக்கரம்)

மணிபூரகம்
 
அனாகதம் (இதய கமலம் )

விசுத்தி
 
ஆக்ஞை

 நல்லவையையே எப்போதும் எழுத முயலும் சுந்தரவடிவேலு அவர்களின் தன்னைப்பற்றிய அறிமுகத்தில் சில நேரங்களில் அதீத புத்திசாலியாகவும், சில நேரங்களில் வடிகட்டிய முட்டாளாகவும், இரட்டை நிலையில் இருப்பதாகவும் சொல்லுகின்றார்கள்.

அவரது வலைப்பூவில் கவிதை ஏதேனும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கையில் அபத்தத்தில் நம்மைச் சிரிக்க வைத்து விட்டார்கள்.

அத்தோடு காதலின் அடுத்ததளம் என்ற பதிவில் சில அபிப்ராயங்களாக வெளிப்படுத்துகின்றார்கள்.பாப்பாவின் குறும்பு கவிதையில் மழலையின் அன்பை நமக்கு வரிகளாக வடித்திருக்கின்றார்கள்.

கணினியின் தற்போது அதிகமாக விண்டோஸ் இயக்கு தளத்தினை தான் நாம் உபயோகின்றோம்.

ஆனால் விண்டோஸை விட லினக்ஸ் சிறந்தது என்று லினக்ஸ் சார்பில் நம்மோடு அதன் சிறப்பம்சங்களை சொல்லிட வரும் சரவணன் அவர்களின் லினக்ஸ் தமிழன் வெல்வான் வலைப்பூவிலிருந்து சில பதிவுகளை பார்ப்போமாக.

உபுண்டு 12.04இன் கணினி முகத்திரைகள்

உபுண்டுவில் புதிய VLC-2.0 ஊடக இயக்கியை நிறுவது எவ்வாறு?

லினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு தகவல்....


காலதேவனின் கைக்குழந்தையாக, பூமித்தாயின் மடியில் தமிழ் தேடி தவமிருக்கும் தமிழ்க் காதலன் அவர்களின் இதயச் சாரல் வலைப்பூவில் ”இனிய தாகம்..!” நம் தாகத்தை தணிக்கின்றது.விடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தைகளின் வழியே ”நதி மூலம்...!” பார்க்கச் சொல்கின்றார்கள்.

 ”புதிராகும் மலர்..!” பதிவில் நம்மிடம் மலரோடு பேசி கண்ட முடிவினை கவிதை வழியாக அறியத் தருகின்றார்கள்.

நிச்சயம் நாமும் இத்தளத்தில் கொஞ்சம் நேரம் செலவழித்து மேலும் இவ்வலைப்பதிவரை ஊக்குவிப்போமே.!

குட்டிக் கதைகள் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதிக்கதைகள் தந்திடும் ந.உதயகுமார் அவர்களின் சில கதைகளை இங்கே பகிர்கின்றேன்.

பச்சோந்திக் கல்
 
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது
 
அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து
 
நாவினால் சுட்ட வடு
 

இந்த வலைப்பதிவின் ஆசிரியர் பாட்டி ருக்மணி சேஷாசாயி அவர்களின் வலைப்பூவினில் இருக்கும் கதைகளை அனுமதியோடு மற்றொரு இடத்தில் வணிக நோக்கமின்றி பகிர்வதற்காக அனுமதி முகநூலின் வழியே கடந்த ஓராண்டுக்கு முன்பு கேட்டிருந்தேன்.

ஏதோ ஒரு சூழலினால் அவர்களது பதில் எனக்கும் இன்னும் வந்தபாடில்லை. இது என் புறமேயிருக்க எதிர்கால சமுதாயம் பண்போடும், வரலாற்றினை அறிந்தவர்களாக விளங்கச் செய்வதே தன்னுடைய குறிக்கோள் என்று பாட்டியார் வலைப்பூவினில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அவர்களின் வலைப்பதிவில் சில.

96 - தந்தையின் பெருமை.

92-நம்பிக்கையின் சிறப்பு.

87-சிறந்த நீதிபதி


பாட்டியின் நீதிக்கதைகளைப் படித்த நாம் கங்கா அவர்களின் தினமும் ஒரு ஜென்கதைகள் வலைப்பூவிற்கு தேனுறிஞ்சிடும் தும்பியாய்ப் பறந்திடுவோமே! இந்தக் கதைகளானது எதிர்கால சமுதாயத்தினை நல்வழிப்படுத்திட நல்லதொரு தூண்டுகோலாய் அமைந்திடும் என்பதிலும் விதிவிலக்கில்லை.

இந்த வலைப்பூவானது பல ஜென் கதைகளை பகிர்ந்தளித்திருக்கின்றது. அவற்றில் சில

ஒன்பது திருடர்கள் - தினம் ஒரு ஸென் கதை

விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு துளி நீர் - தினம் ஒரு ஸென் கதை

நம் வலைப்பூவின் வாசகர்கள் வெளியிடும் கருத்துகளை பகுப்பாய்வு செய்யாமல் வெளியிட்டால் எதிர்கொள்ளவிருக்கும் சங்கடங்களை நேரில் கண்டு கொள்ளுங்கள். நல்ல ஒரு தளம் இப்போது கதைகளைத் தொடர்ந்து தரமுடியாமல் நின்று விட்டது போல எனக்குத் தெரிகின்றது.


கணினி அறிவு குறித்தும், சுதந்திர மென்பொருட்கள் நிறுவல் குறித்தும் பயனுள்ள பல தகவல்களை கொண்டிருக்கும் இத்தளத்தினை இங்கே அறிமுகப் படுத்திட விரும்புகின்றேன்.

பார்த்தவைகளில் சில.
Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips

உபுன்டுவில் கிம்ப் (Gimp) நிறுவுவது எப்படி?
 
வீட்டுக்கடன் EMI கணக்கு போடுவது எப்படி?
 
ஓப்பன் ஆபீஸ் 3.1 - என்ன புதுசு?


சிறில் அலெக்ஸ் அவர்களின் பைபிள் கதைகள் வலைப்பூவினை நான் கடந்த மூன்று வருடங்களாக தேவைப்படும் சமயத்தில் எல்லாம் பைபிள் கதைகளைப் படித்துக் கொண்டு வருகின்றேன்.

அவர்கள் இத்தளத்தினை தொடர்ந்து நடத்திட வேண்டுமாய் வாசகர்களின் சார்பிலே கேட்டுக் கொள்கின்றேன். சில கதைகள் உங்களின் பார்வைக்கு.

ஆபிரகாமின் பலி

மூன்று வழிப்போக்கர்கள்"

பயணம் துவங்கியது


நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்து போக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்று போக மறுக்கும் “நானும் உள்பட” என்று தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ளும் மதுரன் அவர்களின் சிறகுகள் வலைப்பூவினில் பல கட்டுரைகள் தன் சுய சிந்தனையுடன் வடித்திருக்கின்றார்கள்.

நான் படித்த சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்

தமிழனின் பின்னடைவுக்கு காரணம் தெரியுமா?

வழிதேடும் சுவடுகள் - பாகம்1



“அன்பை விட ஆயுதம் எதுவுமே இல்லை” என்று அன்பாலே ஒரு வலைப்பூவினை வடிவமைத்திருக்கின்றார்கள் மன்னையின் செல்வன் சிவா அவர்கள்.

கற்பனையில் வரைந்த மீண்டும் அடுத்த கடிதத்தில்..  நகைச்சுவை ததும்ப அவரது சிந்தனையை நம்மோடு பகிர்ந்திருக்கின்றார்கள். அவசரமான இவ்வுலகிலே நாம் எவ்வளவு வேகமான இயந்திரத் தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனையும் அதனுடைய முடிவுப் பொருளையும் நமக்கு தனியே ஒரு நடைப்பயணம். வழியே வழங்குகின்றார்கள்.

 இதயம் இடம் மாற்றி .... என்ற கவிதைப் பதிவிலே அன்பானவர்களின் இதயத்தின் அருகே தன் இதயத்தினை பத்திரமாய் வைக்கும் வரிகள் பல்நோக்கில் சிந்திக்க தக்கன.

மனதில் தோன்றும் எண்ணங்களே எழுத்துகளின் வடிவமாய் நாம் கண்டு ரசிக்கின்றோம் என்று என் சகோதரியிடம் பல முறை கலந்துரையாடியிருக்கின்றேன். 

அதனை மெய்பிக்கும் விதமாக ஈழமண்ணின் இலக்கிய ரசனையாளர் திருவாளர் வந்தியத் தேவன் அவர்களின் என் உளறல்கள் வலைப்பூவானது நமக்கு பல ரசிப்பிற்குகந்த வரிகளை நமக்கு தருகின்றன.

நான் படித்து ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வெனக்கு.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ
 
ஐ மிஸ் யூடா!
 
வாழ்நாள் சாதனையாளர் செங்கைஆழியான்

கிராமத்து விதையாய் பாலை நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எழுத்தாணி சே.குமார் அவர்களின் சிறகில்லா பறவையோடு நாமும் பறந்திடுவோமே! தண்டவாளப் பூக்களின் நாயகி நந்தினியின் எண்ண அலைகளையும், எடுத்திருக்கும் சிறப்பான முடிவையும் படித்த பின்பு நாம் எழுத்தாளரை பாராட்டமல் இருக்க மனம் வருவதில்லை.

ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்கள். இங்கு பங்காளிச் சண்டை யில் இளம்பிராயத்து நிகழ்வுகளையும் சமாதானம் சொல்ல இப்போது நம்மோடு அந்த உறவுகள் இல்லையே என்ற ஏக்கத்தினையும் நமக்கு வடித்து தந்திருக்கின்றார்கள்.


இணைய உலகிலே தொழில் நுட்பச் சக்கரவர்த்திகள் நமக்கு இலவச தொழில் நுட்ப உதவிகளை செய்து தருபவர்கள் எண்ணில் சிலரே.! அவர்களில் நம் தங்கம் பழனி அவர்களும் ஒருவரே!

இவர்களைப் பற்றிய அறிமுகத்தினை வலைச்சரத்தில் பலர் சிறப்பாசிரியர்கள் எடுத்துரைந்திருக்கின்றபடியால் நான் பார்த்த சில ஆக்கங்களை உங்களோடு பகிர்கின்றேன்.

ஆடு வளர்ப்பு -லாபம் நிரந்தரம்!
 
முயல் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்..!

தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பொன்மொழிகள் !

அலெக்சா ரேங்க் உயர வழிகள்..

"எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள" தொடருக்கு "அழகி"யின் அங்கீகாரம்..!!

Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!


அடுத்த தொகுப்போடு பின்னர் வருகின்றேன்.

நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...